தாதியர்கள் போராட்டம்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டதோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

அரச தாதிய உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஷ்கரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் இன்று (புதன்கிழமை)  முன்னெடுக்கப்பட்டது.

நோயாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்த போராட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு நிலுவைகள் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லையெனவும் பல தடவைகள் இது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்தபோதும் நிர்வாகம் தங்களை ஏமாற்றிவருவதாக தாதியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

‘மூன்று வருடமாகியும் ஏன் தாமதம்’, ‘மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்’, ‘ஏன் இன்னும் மௌனம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த பிரச்சினை நாடளாவிய ரீதியில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு விரைவில் தீர்த்துவைக்கும் என சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.கலாஞ்சரஞ்சனி தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.