யாழ் மீனவர்களுக்கு வலையில் வந்த அதிர்ஷ்டம்!

யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அதிர்ஷ்டமாக மீன் ஒன்று சிக்கியுள்ளது.


யாழ்ப்பாணம் - பாசையூர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கே நேற்று காலை இந்த மீன் சிக்கியுள்ளது.

104 கிலோ கிராம் நிறையுடைய பாரியளவிலான மீன் சிக்கியதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அதிர்ஷ்டமாக பாரிய மீன் கிடைத்த போதிலும், அதனை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராமை ஏமாற்றம் அளிப்பதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த மீனை பாரிய விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மீன் சந்தைக்கு கொண்டு செல்வதாக மீன்வர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.