அநுராதபுரம் விபத்தில் வவுனியாவை சேர்ந்த நால்வர் காயம்!

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து விமானநிலையம் நோக்கி பயணித்த வான், அநுராதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் பயணித்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி நேற்று (திங்கட்கிழமை) மாலை விபத்திற்குள்ளானது.
குறித்த வானில் தாண்டிகுளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்திருந்த நிலையில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்து வவுனியா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞரை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப சென்றுக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்துதொடர்பாக மதவாச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.