அமெரிக்கா- வடகொரியா உறவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது: அமெரிக்க பிரதிநிதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோரது வியட்நாம் சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாமல் போய் இருக்கலாம்;
எனினும் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திரம் இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது என வடகொரியாவுக்கான சிறப்பு அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் பெய்கன் தெரிவித்துள்ளார்.

கிம், ட்ரம்ப் ஆகியோரது பேச்சுவார்த்தை தொடர்பில் வொஷிங்டனில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் அணுவாயுதங்ளை ஒழிக்க வடகொரியா முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை வெளியிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த விடயத்தில் தீர்வை எட்ட அமெரிக்கா தயாராகவே உள்ளது. எவ்வாறாயினும் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுமானால் அதில் புதிய விடயங்கள் எதுவும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என  அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அணுவாயுதங்களை ஒழித்தல் கொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குதல் ஆகிய பிரதான நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள முறையே அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகள் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. அந்த சந்திப்பு கடந்த மாத இறுதியில் வியட்நாமில் இடம்பெற்றது. இருப்பினும் இந்த சந்திப்பின்போது எந்த உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.