ஆசிரியரின் அடாவடி: 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் குறித்த ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள் மீது அந்த வகுப்பாசிரியர் கையினாலும் தடியினாலும் தம்மை மிகவும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப் பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் அப் பாடசாலையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.