ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி120 ஏக்­கர் நில மாற்றத்தால் சிறீதரன் சீற்றம்!!

பரந்தன் இரசாயன தொழிற்சாலை என்ற பெயாில் கொழும்பில் இயங்கிக் கொண்டி ருக்கும் தொழிற்சாலையை  பரந்தனுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படும். என ஜனாதிபதி கூறி 3 மாதங்கள் கடந்துள்ளபோதும் வாக்குறுதி நிறைவேற் றப்படவில்லை.


2018 ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 17 ஆம் திகதி அரச தலை­வ­ரின் வடகிழக்­குக்­    கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணிக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் அரச தலை­வர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது. வடக்­கில் இயங்­கிய பெரும் தொழிற்­சா­லை­க­ளில் ஒன்­றான

பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை நாட்­டில் தற்­போது இயங்­கு­கின்­றதா? இல்­ லையா? என்­ப­தனை உரிய அமைச்­சின் அதி­கா­ரி­கள் தெரி­யப்படுத்த வேண்­டும் என்று அந்­தக் கூட்­டத்­தில் அரச தலை­வ­ரி­டம் கோரப்­பட்­டது. உரிய அமைச்­சின் அதி­ கா­ரி­கள் அது தொடர்­பில் விளக்க வேண்­டும் என்று அரச தலை­வர் தெரி­வித்­தி­ருந்­தார்.

பரந்­த­னில் இர­சா­யன தொழிற் ­சா­லைக்கு 120 ஏக்­கர் நிலம் உள்­ளது. போரால் அழி­வ­ டை­துள்ள அந்­தத் தொழிற்­சாலை சீர­மைக்­கப்­பட்டு இயங்க வைக்­கப்­ப­டும் என்று அதி­ கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அந்­தத் தொழில்­சா­லை­யின் பெய­ரில் கொழும்­பில் தொழிற்­ சாலை ஒன்று இயங்­கு­கின்­றது.

அந்­தத் தொழிற்­சா­லை­யின் பெய­ரில் பல வாக­னங்­கள் திரி­கின்­றன. பரந்­தன் இர­சா­ ய­னத் தொழிற்­சா­லை­யில் பணி­யாற்­றிய பலர் தற்­போ­தும் தொழில் இல்­லா­தி­ருக்­கின்­ ற­னர். ஆனால் அந்­தத் தொழிற்­சா­லை­யின் பெய­ரில் இப்­போது கொழும்­பில் பலர் பணி­யாற்­று­கின்­ற­னர் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன்

சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால இந்த விட­யங்­கள் தொடர்­பாக அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­ட­போது, அதி­கா­ரி­கள் ஆம் எனப் பதி­ல­ளித்­தி­ருந்­த­னர். அப்­ போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா அந்­தத் தொழிற்­சாலை எங்­ கே­னும் இயங்­கு­வது தொடர்­பில் வர­வேற்க வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

அதற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் பரந்­தன் இரா­சா­ய­னத் தொழிற்­சாலை எனில் அது பரந்­த­னில் இயங்க வேண்­டும், கொழும்­பில் இயங்­கு­வ­தா­னால் அதைக் கொழும்பு இர­சா­ய­னத் தொழிற்­சாலை எனப் பெயர் மாற்ற வேண்­டும் என்று கூறி­யி­ ருந்­தார்.

அதை­ய­டுத்­துப் பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை என்ற பெய­ரில் இயங்­கும் தொற்­ சா­லையை உட­ன­டி­யாகப் பரந்­த­னுக்கே கொண்டு செல்ல வேண்­டும் என்று அரச தலை­வர் உத்­த­ர­விட்­டார். அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு 3 மாதங்­கள் கடந்­துள்­ள­ போ­தும் அந்த விட­யத்­தில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை.

அரச தலை­வ­ரின் இந்த வாக்­கு­று­தி­யும் காற்­றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளது என்று நாடா­ ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் குறிப்­பிட்­டுள்­ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.