அனுமதி பெற்று காவடிக்கு முள் குத்த வேண்டும்-சுகாதார திணைக்களம்!!

கோவில்களில் காவடிக்கு முள் குத்துவதற்கு சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெ றவேண்டும். அவ்வாறான அனுமதி பெறாதவா்கள் முள் குத்த இடமளிக்கப்படாது என சாவகச்சோி சுகாதார பிாிவு அறிவித்துள்ளது.


காவடி எடுப்­போ­ரின் நலன் கருதி காவடி முள் வைத்­தி­ருப்­போ­ரும் முட்­கா­வடி எடுக்­க­ வுள்­ளோ­ரும் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்ட பின்­னரே காவடி எடுக்­க­ மு­டி­யு­மென்­ றும் அனு­மதி பெறா­மல் நேர்த்­திக்­கா­கக் காவடி எடுக்க முயன்­றால்
சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என­வும் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தினர் அறி­வித்­துள்­ள­னர். சாவ­கச்­சேரி மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆலய பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­தை­யொட்டி வெளிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் இவ்­வாறு அறி­வித்­துள்­ள­னர்.

பொங்­கல் உற்­ச­வத்­ தை­யொட்டி தண்­ணீர்ப் பந்­தல் நடத்­து­வோர் பயன்­ப­டுத்­த­வுள்ள கிணறு தொடர்­பான விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பித்து பொதுச் சுகா­தார பரி­சோ­த­க­ரின் அறிக்கை பெற்ற பின்­னரே கிணற்­று­நீர் பாவ­னைக்கு எடுக்க வேண்­டும். கிணற்­றி­லி­ருந்து வாக­ னங்­க­ளில் கொண்டு வரு­ப­வர் தனி­ந­பர் சுகா­தா­ரம் தொடர்­பான பரி­சோ­தனை மேற்­ கொண்டு அறிக்கை பெற்­றி­ருக்­க­வேண்­டும்.

பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­சவ காலத்­தில் வெப்­பம் அதி­க­மா­கக் காணப்­ப­டு­வ­ தால் குழந்­தை­கள் சிறு­வர்­க­ளு­டன் வரு­வோர் சுத்­த­மான குடி­தண்­ணீ­ரைக் கொண்டு வரு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர். ஆலய வளா­கத்­தில் காணப்­ப­டும் தீர்த்­தக் கேணி­நீர் பொங்­கல், அன்­ன­தா­னம் போன்­ ற­வற்­றுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தால் இரா­ச­ய­னப் பொருள்­க­ளான சவர்க்­கா­ரம் சம்போ பாவிப்­பதை தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும் அறி­வித்து மக்­க­ளின் சுகா­தார நலன் கருதி நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தால் அடி­ யார்­களை ஒத்­து­ழைப்பு வழங்­கு­மா­றும் கேட்­டுள்­ள­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.