ஜனாதிபதியும் இலஞ்ச ஊழல் குற்றங்களை மேற்கொண்டுள்ளார் – பாலித குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலஞ்ச- ஊழல் குற்றங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் இதனை வெளிக்கொண்டுவந்த காரணத்தினாலேயே அரசியல் பழிவாங்களுக்கு தான் உள்ளாகியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலஞ்ச- ஊழல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இதனை இல்லாதொழிக்க தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமே.

ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கை அரசியலில் நிகழ்ந்த சம்பவமும் இதற்கான உதாரணமாகவே காணப்படுகிறது.

மக்கள் ஆணையுடன் ஆட்சி பீடமேறிய ஒரு அரசாங்கம், சட்டவிரோதமாக, இன்னொரு தரப்பிடம் இலஞ்சமாக ஒப்படைக்கப்பட்டது.

இலஞ்சம் என்பது பணத்துடன் மட்டும் தொடர்புடையது அன்றி, பதவி, அதிகாரத்தை கொடுத்தும் இந்தக் குற்றத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்ட தலைவர்கள், இந்த குற்றத்தை வெளிக்கொண்டுவந்த நபர்களை அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

அந்தவகையில்தான் நானும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்து விட்டபோதிலும், அமைச்சுப் பதவியொன்று எனக்கு வழங்கப்படவில்லை.

இதனையிட்டு நான் கவலையடையப்போவதில்லை. தற்கொலை செய்துக்கொள்ளப்போவதுமில்லை. இவற்றுக்கு முகம் கொடுக்க நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.