குழறுபடியில் யாழ் மாவட்ட தாதியர் இடமாற்றங்கள்!!

2019 ஆம் ஆண்டிற்கான யாழ் மாவட்ட தாதியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றியவர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியும். ஆனால் விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அதேவேளையில் விண்ணப்பிக்காதவர்கள் சிலரிற்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த இடமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இடமாற்றசபையை தொடர்புகொண்டு வினவியபோது, தாதியர் சங்க உறுப்பினர்களின் தலையீட்டால் இடமாற்றம் வழங்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டதாக தாதியர் தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் 5 வருடங்களை பூர்த்தி செய்த பலர் கடமையிலுள்ள போதும், தாதியர் சங்க தலைவருடன் முரண்பட்ட ஒருவருக்கு மாத்திரம் அங்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, அந்த வைத்தியசாலையில் தேவை கருதி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுவான கொள்கையொன்றின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.