நோர்வே உயர் அதிகாரி இருநாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை விஜயம்!

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நோர்வேயின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் மரியான் ஹேகன் வருகை தரவுள்ளார்.


இரண்டு நாள் பயணமாகஎதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நோர்வே அரசாங்கம் இலங்கையில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.