மட்டக்களப்பில் த.தே.ம.முன்னணியால் அன்ணை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!


தியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முனனணியின் மட்டக்களப்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அன்னை பூபதியின் திருவுருவ படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி வணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.