பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடச் சென்றார் சிம்பாப்வே ஜனாதிபதி!!

சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் (Emmerson Mnangwagwa) “இடாய்” சூறாவளி தாக்கிய அந்நாட்டின் சிமனிமணி மாவட்டத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார்.


இடாய் எனபெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடந்த வியாழக்கிழமை இரவு மொசாம்பிக் குடியரசை தாக்கிய நிலையில் அதனை தொடர்ந்து சிம்பாப்வேயை நோக்கி ஊடுருவியது. இதனால் சிம்பாப்வேயில் கிழக்கு சிமனிமணி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியை பார்வையிட ஜனாதிபதி எம்மர்சன் நேற்று (செவ்வாய்க்கிழமை ) சென்றுள்ளார்.

தெற்கு ஆபிரிக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மிக பெரிய அனர்த்தம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன் வந்திருப்பதாக சிம்பாப்வே ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆபிரிக்க பகுதியில் 2.6 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதோடு பாரியளவிலான சொத்துக்கள் சேதமைந்துள்ளன. இந்நிலையில் இவ்வனர்த்தத்துக்கு உடனடியாக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மொசாம்பிக், சிம்பாப்வே ஆகிய பகுதிகளைத் தாக்கிய இடாய் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் காற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.