இந்தோனேஷிய வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது!!

இந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சேற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்தோனேஷிய வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டதோடு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதோடு 159 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை 74 பேர் காணாமல் போயுள்ளனர் என இன்று (புதன்கிழமை) வெளியான அந்நாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த 16 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளம் 34 கிராமங்களை பாதிப்படையச் செய்துள்ளது. 6,831 பேருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்க 800 இராணுவத்தினரும் 700 பொலிஸ் அதிகாரிகளும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 4000 மீட்பு பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர் என என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பப்புவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.