கதிர்காமத்திற்கு சுத்தமான குடிநீர்...!

சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 12 நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்.


இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களினதும் காதிர்காமத்தை அண்மித்த பிரதேச மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்யும் முகமாக தாபிக்கப்பட்டுள்ள 06 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றும் (19) இன்றும் (20) இடம்பெற்றது.

கதிர்காமத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களும் பிரதேச மக்களும் நீண்ட காலமாக முகங்கொடுத்து வந்த சுத்தமான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அண்மையில் கதிர்காமத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற ஜனாதிபதி அவர்களிடம் கதிர்காம பெரிய கோவிலின் பதில் கடமை பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இந்த பிரச்சினை தொடர்பான கோரிக்கை முன்வைத்திருந்தார்.

அதற்கமைய கதிர்காம வணக்கஸ்தலமும் அதனை அண்மித்த விகாரைகளையும் பாடசாலைகளையும் மையமாகக்கொண்டு 12 நீர் சுத்திரகரிப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதில் 06 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் எண்ணகருவிற்கமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தின் 437 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அநுராதபுர பொது வைத்தியசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் இசுறுமுனிய விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600ஆவது நீர் சுத்திகரிப்பு தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வுடன் இணைந்ததாக கதிர்காம வணக்கஸ்தலத்தையும் அதனை அண்மித்த பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை தஹம் சிறிசேன திறந்து வைத்தார்.













கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.