புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்!!

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக, இன்று மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்க்கு புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா தலைமை ஏற்றார்.

ம.தி.மு.க நகர செயலாளர் திரு.இளங்கோவன், பு.இ.மு தோழர் உதயகுமார் கண்டன உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், திருமிகு.சரசுவதி அவர்களோடு, சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக பெண்களும், திருமிகு. கற்பகம் அவர்களோடு திருப்பத்தூர் திருநங்கைகள் நலம் சங்கம் சார்பாக சகோதரிகளும், மனித நேய மக்கள் கட்சி சார்பாக தோழர்களும், திராவிட கழக தோழர்களும், மேலும் பல வழக்கறிஞர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள்,  இளைஞர்கள்,  பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.