கடற்படை தளம் அமைக்க“வலி.வடக்கு பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு!!

கடற்படை தளம் அமைப்பதற்காகவும், சுற்றுலா அதிகார சபையின் தேவைகளுக்குமாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் 232 ஏக்கர் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காகவும், சுற்றுலா அதிகார சபைக்காகவும் சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளன.
எமது பிரதேசத்திலுள்ள ஒரு அங்குல நிலத்தினை கூட நாம் சுவீகரிக்க அனுமதிக்க மாட்டோம். காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்“ என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.