இலங்கையின் மந்தகதியான செயற்பாட்டுக்கு சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை!!

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை செயற்படுத்தும் இலங்கையின் மந்தகதியான செயற்பாட்டுக்கு சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற 40ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றியபோதே சுவிட்ஸர்லாந்து பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமைகள் விடயங்களில் இலங்கையின் மந்தமான செயற்பாடு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுக்கு சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை விடுத்தது.

மேலும் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் உள்ள மந்தசெயற்பாட்டிற்கு சுவிட்ஸர்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.