செயற்கை மழைத் திட்டம் வெற்றி!

செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இரசாயனப் பதார்த்தம் தூவப்பட்டுள்ளதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் அப்பகுதிகளில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கப் பகுதிகளின் வான்பரப்பில் எதிர்வரும் நாட்களிலும் செயற்கை மழையைப் பொழிய வைப்பதற்காக, இரசாயனப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.