மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

குறித்த பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவைத் தெரிவிக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.