ஈரோட்டில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டி!!
மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியிருந்தது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுகவின் மூலமே மதிமுக பெற உள்ளது. இதனால், மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுகவின் மூலமே மதிமுக பெற உள்ளது. இதனால், மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை