ஜெனிவாவில் ஆளுநர் வெளியீட்ட நம்பிக்கை என்ன??
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவார் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் வைத்து செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
‘காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மனிதாபிமான நாகரிக பிரச்சினை. இதிலிருந்து ஒருபோதும் நகர்ந்து செல்ல முடியாது என்று அரச தலைவருக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் தேவைகளுக்கு செவிமடுக்க வேண்டியது அவசியமாகும். ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்களை நிறுவுவது அவசியமாகும்’ என்றார் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.
கருத்துகள் இல்லை