போயிங் விமான விபத்துக்களின் இறுதி தருணம் அச்சமூட்டுகிறது: இந்தோனேஷிய ஆய்வாளர்!!
எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில் இடம்பெற்ற போயிங் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விபத்துக்களின் இறுதி தருணம் அச்சமூட்டுவதாக இந்தோனேஷிய விமான விபத்து ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் கடந்த மார்ச் 10 திகதி விபத்துக்குள்ளாகி 157 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த வருடம் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய போயிங் விமான விபத்து தொடர்பான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் கட்டுப்பாட்டறை குரல்பதிவு சாதனத்தின் இறுதி 20 நொடிகள் கடும் திகிலூட்டுவதாக அமைந்துள்ளதென இந்தோனேஷியா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விமானம் பறக்கும் உயரம், வேகம் தொடர்பில் விமானிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தமது குறிப்புப் புத்தகத்தை ஆராய்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
189 பேரை காவுக்கொண்ட இந்தோனேஷிய போயிங் விமானத்தின் 90 வீதமான தரவுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் விபத்துக்கான இறுதி அறிக்கை வெளியிடப்படும். இது எதிர்வருகின்ற ஒகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை போயிங் விமான விபத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் கணிசமான அளவு ஒற்றுமை இருப்பதாக எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக ஆராயும் பிரான்ஸின் விமான விபத்து விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் விமானத்தை செலுத்தியுள்ள நிலையில் கணினி தரவுகள் எவ்வாறு தவறான தகவல்களை அனுப்பியுள்ளதென ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எத்தியோப்பியாவுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் கடந்த மார்ச் 10 திகதி விபத்துக்குள்ளாகி 157 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த வருடம் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய போயிங் விமான விபத்து தொடர்பான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் கட்டுப்பாட்டறை குரல்பதிவு சாதனத்தின் இறுதி 20 நொடிகள் கடும் திகிலூட்டுவதாக அமைந்துள்ளதென இந்தோனேஷியா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விமானம் பறக்கும் உயரம், வேகம் தொடர்பில் விமானிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தமது குறிப்புப் புத்தகத்தை ஆராய்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
189 பேரை காவுக்கொண்ட இந்தோனேஷிய போயிங் விமானத்தின் 90 வீதமான தரவுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் விபத்துக்கான இறுதி அறிக்கை வெளியிடப்படும். இது எதிர்வருகின்ற ஒகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை போயிங் விமான விபத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் கணிசமான அளவு ஒற்றுமை இருப்பதாக எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக ஆராயும் பிரான்ஸின் விமான விபத்து விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் விமானத்தை செலுத்தியுள்ள நிலையில் கணினி தரவுகள் எவ்வாறு தவறான தகவல்களை அனுப்பியுள்ளதென ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை