கச்சத்தீவு அருகே 11 தமிழகமீனவர்கள் கைது!
கச்சத்தீவு அருகே 11 மீனவர்களை கைது செய்த சிறிலங்கா கடற்படை, இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
ராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அப்போது தவறுதலாக இலங்கை எல்லைக்குள் சென்றுவிடுவது உண்டு. மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் சிறிலங்கா கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள்.
இன்று ஏராளமான மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறிலங்கா கடற்படையினர் இரண்டு படுகுகளை பறிமுதல் செய்ததோடு, 11 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“
கருத்துகள் இல்லை