திருக்கேதீஸ்வரம் நுழைவாயில் விவகாரம் – சந்தேகநபர்களுக்கு பிணை!!

மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சட்டத்தரணியூடாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியுள்ளனர்.
அருட்தந்தை ஒருவர் உற்பட குறித்த 10 சந்தேகநபர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையினை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
அத்தோடு மீண்டும் இம்மாதம் 29ஆம் திகதிக்கு வழக்கு விசாரனைகளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.