முல்லை வீதியில் இடம்பெற்ற விபத்து!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முதன்மை வீதியில் தண்ணீரூற்று பகுதியில் 24.03.19 அன்று இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்கள்.


எப்.சட் எனப்படும் பெறுமதியான உந்துருளியில் முல்லைத்தீவில் இருந்து தண்ணீரூற்று செல்லும் போது வளைவு ஒன்றில் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாலத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது மாமூலையினை சேர்ந்த 17 அகவையுடைய சு.கஜீவன்,18 அகவையுடைய ய.நிலுயன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளார்கள் இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.