வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் கால் ஆண்டில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது.

இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். எனவே கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்த நீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.