வடக்கில் மின்வாசிப்பாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்படுவார்கள் - ரவி கருணா!!

வடக்கில் மின்வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடக்கில் மின்வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்க, வடக்கில் மின்வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கினார்.

இதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூட்டமைப்பிற்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.