மூன்றாவது வருடமாக தொடரும் கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம்.!


சிறீலங்கா அரச படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது பூர்விக நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அறவழிப் போராட்டம் மூன்று வருடங்களை எட்டியுள்ள போதிலும் சிறீலங்கா அரசு அம் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை இதுவரை அவர்களிடம் கையளிக்கவில்லை
இந் நிலையில் அவர்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு  இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காததானாலும் அத்துடன்  வட மாகாண ஆளுநர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நாய்கள் என கூறியதற்கு தமது கோபத்தை காட்டும் விதமாகவும் இன்றைய தமது போராட்டத்தினை உணவு தவிரிப்புப் போராட்டமாக முன்னெடுத்தார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.