திருமணத்திற்காக விராட் பெயரை மாற்றினோம்: அனுஷ்கா!

திருமணம் குறித்த தகவல் வெளியே பரவிவிட கூடாது என்பதற்காக திருமணத்திற்கு சாப்பாடு கான்டிராக்ட் புக் செய்யும் போது தங்கள் பெயரை மாற்றி பதிவு செய்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்துக்கொண்டனர். தங்கள் திருமணம் குறித்து அவர்கள் மீடியாக்களுக்கு தகவல் அளிக்கவில்லை.

இதுகுறித்து அவ்வபோது செய்திகள் வந்ததே தவிர, இந்த ஜோடியிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்வரவில்லை. பின்னர் இருவரும் திருமண புகைப்படங்கை இணையத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து அனுஷ்கா சர்மா ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அப்போது இந்த திருமணத்திற்காக தங்களின் பெயரை மாற்றி பயன்படுத்தியதாக கூறியுள்ளார். அவர் பேசும் போது, "எங்கள் திருமணத்தில் வெறும் 42 பேர் தான் கலந்துக்கொண்டனர். நானும் விராட்டும் திருமணம் செய்துக்கொள்வது பெரிய செலபிரிட்டி வெட்டிங்காக இருக்க  கூடாது என்று நினைத்தேன். இதுகுறித்து வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக மணமகன், மணமகள் பெயரை மாற்றி தான் சமையலுக்கு புக் செய்தோம். விராட்டின் பெயரை ராகுல் என்று மாற்றினோம்" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.