தொடரூந்திலிருந்து வீழ்ந்து இளைஞர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற தொடரூந்தில் இருந்து இன்று (05) அதிகாலை 2.40 மணிக்கு இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த சம்பவம் வவுனியா செட்டிக்குளத்தில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் 24 வயது மதிக்கத்தக்க மடு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என்பதுடன் குறித்த நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மிதிபலகையில் அமர்ந்தவாறு பயணம் செய்ததாகவும் தூக்கத்தின் காரணமாகவே தவறி தொடரூந்திலிருந்து கீழே விழுந்ததாக முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் குறித்து பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், அதிகாலையில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போது குறித்த இளைஞர் நடக்க முடியாத நிலையில் தண்டவாளத்தின் அருகில் கூக்குரலிட்ட நிலையில் இருந்ததை அவதானித்து பறயனாலங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் குறித்த இளைஞனை செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து வவுனியா பொது வைததியசாலையின் அவச சிகிச்சை பிரிவிற்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.