பொலிசாரிடம் சிக்கிய 500 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினகல்!

கொழும்பை அண்மித்த பகுதியில் வைத்து 500 முதல் 700 கோடி ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும் மிகப் பெரிய பெறுமதியுடைய இரத்தினகல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதுஷின் சகாக்களை தேடும் விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

பன்னிப்பிட்டிய, ஆரவ்வல பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினகல் மீட்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி 500 முதல் 700 கோடி ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சந்தேக நபரின் பிட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினை சோதனையிட்டப்பட்ட போது ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷினால் இந்த இரத்தினகல் கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.