அம்பாறை – பன்னல்கம பகுதியில் கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பு!

அம்பாறை – பன்னல்கம பிரதேசத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றிலிருந்து, கஞ்சா பண்ணையொன்று கண்டுபிடிக்கப்பட்டு, தமண பொலிஸாரால் அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமண ​பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பண்ணையிலிருந்து 3,500 கஞ்சா செடிகள் தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் போதைப் பொருள் ஒ​ழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க தலைமையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.