வலஸ்முல்லை பிரதேசத்தில் மனித தோற்றத்தை ஒத்த மர்ம உருவம்!

வலஸ்முல்லை பிரதேசத்தில் மனித தோற்றத்தை ஒத்த வித்தியாசமான குள்ள உருவமொன்றை கண்டதாக பிரதேசவாசிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு இந்த பிரதேசத்தில் சிலர் அதனை அவதானித்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து பிரதேச மக்களிடையே ஒருவித பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்திற்குள் வந்த அந்த உருவங்கள் காட்டுப் பகுதிக்குள் ஓடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மனித தோற்றத்தை ஒத்ததாகவும் நீண்ட முடியுடனும் அந்த உருவங்கள் இருப்பதாகவே அதனை கண்டதாக கூறியவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மை காலமாக நாட்டில் பல பிரதேசங்களில் இவ்வாறான வித்தியாசமான உருவங்களை அவதானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக தற்போது ஆய்வாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.