நியூசிலாந்தில் இடம்பெற்ற துயர சம்பவத்திற்கு சமூக ஊடகங்களே காரணம் என்கிறார் மைத்திரி!

நியூசிலாந்தில் இடம்பெற்ற துயர சம்பவத்திற்கு சமூக ஊடகங்களே காரணியாக அமைந்திருந்ததாக அறிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு அண்மையில் கண்டி பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்முறையை தூண்டுவதற்கு சமூக ஊடகங்களே முயற்சித்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இதன்போது மேலும் தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்பட்டு 2019ஆம் ஆண்டுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளதாகவும் சமாதானத்தின் பத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் மே மாதம்  நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனித இனத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளை தவறான முறையில் பயன்படுத்துவதனால் இலங்கையைப்போன்று ஏனைய நாடுகளும் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நேற்று நியூசிலாந்தில் இடம்பெற்ற துயர சம்பவத்திற்கும் சமூக ஊடகங்கள் காரணியாக அமைந்திருந்ததாக அறிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் கண்டி பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் வன்முறையை தூண்டுவதற்கு சமூக ஊடகங்களே முயற்சித்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் நவீன தொழிநுட்பம் மனித சமுதாயத்தின் அழிவுக்காக அன்றி வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.