நாட்டை காட்டிக் கொடுத்த மங்கள பதவி விலக வேண்டும்!

நாட்டை காட்டிக்கொடுத்த மங்கள சமரவீர அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையின்  பிரதானி என்ற அடிப்படையில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.


வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு  குறிப்பிட்டார்.
நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை  தவிர்க்க ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக இரகசியமான முறையில் ஜெனிவா விவகாரத்தை நிதியமைச்சர்  மங்கள சமரவீர கையாண்டுள்ளமை தவறான செயற்பாடு எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.