மன்னாரில் இந்து ஆலயம் மீது தாக்குதல்!
மன்னார் மாவட்டத்தில் திருகேதீச்சர ஆலய அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் இந்து ஆலய சிலை உடைக்கப்பட்டமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் ஆலயத்தின் சிலையே உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளது.
சிவராத்திரிக்கு முதல் நாள், மன்னார் திருகேதீச்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் கிறிஸ்தவ மக்களால் உடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மன்னாரில் மதப் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அம்மன் ஆலயத்திலிருந்த சிலை அடித்து உடைக்கப்பட்டு வீதியில் போடப்பட்டுள்ளது. மன்னாரிலுள்ள இந்து மக்களை இந்தச் சம்பவம் புண்படுத்தியுள்ளது. யாரால் உடைக்கப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை