தேர்தல் பறக்கும்படை அத்துமீறி சோதனை-வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து போராட்டம்!!

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி சோதனை செய்ததாகக் கூறி நடுரோட்டில் பணத்துடன் அமர்ந்து வக்கீல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம் மிஷினில் நிரப்புவதற்கு கொண்டுவரப்பட்ட பணம் உட்பட பலர் எடுத்து வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இன்று மூப்பனார் சாலையில் சிவில் சப்ளைஸ் அதிகாரி சுரேஷ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்தக் காரில் இருந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் என்பவர் வங்கியில் அடமானம் வைத்த நகைக்கு பணத்தை செலுத்துவதற்காக ரூ.50,000 ரூபாயை எடுத்து வந்துள்ளார். சோதனையில் அந்தப் பணம் குறித்து கேட்டனர் அதிகாரிகள். அதற்கு அவர் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து பறக்கும் படையினருக்கும், வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வக்கீல் பாலசுப்பிரமணியன், காரை நிறுத்திவிட்டு தான் கொண்டுவந்த பணத்தை நடுரோட்டில் வைத்து தானும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அத்துமீறி சோதனையில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வர வக்கீல் பாலசுப்பிரமணியன் எழுந்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விட்டார். பின்னர் ஆம்புலன்ஸ் சென்ற பிறகு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து போலீஸார் அவரை சமாதானம் செய்தனர். பிறகு அவர் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் அந்தப் பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.