புத்தளம் குப்பை விவகாரம் குறித்து ஐ.நா.வில்!!

புத்தளம்-அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக ஐ.நா.விலுள்ள சூழல் சம்பந்தமான அறிக்கையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை சமூகத்திற்கான ஐரோப்பிய நிலையத்தின் பொதுச்செயலாளர் எம்.வாஹாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.


ஐ.நா.வில் வைத்து ஆதவன் செய்திகளுக்கு விசேடமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாட்டிற்கு புத்தளம் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் அவர்களின் எதிர்ப்பிற்கு செவி சாய்க்காத அரசு இந்த நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இது வன்மையாக கண்டிக்க வேண்டியதொரு விடயமாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.