ஜெயலலிதாவின் மரண விசாரணை – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடைவிதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்பலோவின் மனுவில், தங்கள் மருத்துவர்களை விசாரணை செய்ய 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அதுவரை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடைவிதிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 12ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையின்போது இந்த வழக்கு, திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.