பிரேசிலின் தற்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் மாபெரும் ஆயுத கண்காட்சி!

உலகளவில் பயங்கரவாதம் எந்த கோணத்தில் வரும் என்ற அச்சம் நிலவுகின்ற தருணத்தில், ஒவ்வொரு நாடுகளும் தங்களின் தற்பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் மும்முரமாக இருக்கின்றன.


அந்தவகையில் பிரேசிலின் லத்தின் அமெரிக்க வர்த்தக அபிவிருத்தி நிறுவனமான LAAD டின் ஏற்பாட்டில் பாரிய ஆயுத கண்காட்சியொன்று நடத்தப்பட்டுள்ளது.

தற்பாதுகாப்புக்காகவும், நாட்டின் உள்ளக பாதுகாப்பு பணிகளை முன்னெடுக்கும் முகமாகவும், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆயுதக் கண்காட்சி இடம்பெற்றது.

இதில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தியிருந்தன.

ஜனாதிபதி ஜயர் போல்சனாரோவின் நிர்வாகம் பிரேசிலின் சந்தையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்றைய கண்காட்சியை பிரேசிலின் துணை ஜனாதிபதி ஹமில்டன் மௌராவோ திறந்து வைத்ததுடன், நீதியமைச்சர் செர்ஜியோ மாரோவும் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை, பிரேசிலின் பாரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரவுரபஸ்ஸின் தலைவரான சேல்ஸியோ நுஹாஸ் கூறுகையில், போல்சனாரோவின் அரசாங்கம் வர்த்தக செயற்பாடுகளுக்கு சிறந்தது என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு மிகுந்த நம்மை அளிக்கும் வகையில், அவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.