எட்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாயிடம் சேர்ந்த மகன்!!

தெலுங்கானாவில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தினேஷ் ஜனா என்பவர் பேஸ்புக்கின் உதவியோடு தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


தெலுங்கானாவில் கடந்த 2011ஆம் ஆண்டு 8 வயதான தினேஷ் ஜனா காணாமல் போனதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் அந்த சிறுவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.  தினேஷ், காணாமல் போய் 8 ஆண்டுகள் கடந்த  நிலையில், காணாமல் போன தாயார், பேஸ்புக் கணக்கில் தினேஷ் ஜனா, தினேஷ் ஜனா லிமா எனும் பெயர்களைக் கொண்டு தேடியுள்ளார். அப்போது அவரது மகனின் ஒளிப்படத்தை பார்த்துள்ளார்.

அளவுகடந்த மகிழ்ச்சியுடன், உடனடியாக இதுகுறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். பொலிஸாரின் உதவியுடன் அந்த பேஸ்புக் கணக்கின் ஐபி எண்ணை கொண்டு, காணாமல்போன நபர் பஞ்சாப்பின் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள ரனகலா கிராமத்தில் வசிப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் ஒரு குழுவாக பஞ்சாப் சென்று, தினேஷை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.