புரூணேயின் செயற்பாட்டுக்கு நியூசிலாந்து கண்டனம்!!

ஓரினச்சேர்க்கை மற்றும் விபச்சாரத்திற்கு எதிராக கடுமையான மரண தண்டனையை அமுல்படுத்தும் இஸ்லாமிய சட்டத்திற்கு நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


அத்துடன், இச்செயற்பாடு மனித உரிமைகள் மற்றும் மரண தண்டனை தொடர்பான நியூசிலாந்தின் கொள்கைக்கு முரணானது என்றும் விமர்சித்துள்ளார்.

ஹமில்டனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் நியூசிலாந்து முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், புரூணேயின் செயற்பாடு தமது கொள்கைக்கு மாறாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட புரூணேயில் ஓரினச்சேர்க்கை, விபச்சாரம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோரை கல்லால் அடித்து மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கொடூர சட்டம் நேற்று அமுல்படுத்தப்பட்டது.

இப்புதிய இஸ்லாமிய சட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.