காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு!!

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரே இன்று (செவ்வாய்க்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்த பாலசிங்கம் ஜெயபவான் (வயது 45) என்பவர், கடந்தமாதம் 22ஆம் திகதி இரவு முதல் காணாமல்போயுள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை தேடும் பணியில் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே பாண்டியன்குளம் பகுதியிலுள்ள ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.