குழந்தை பரிதாபச் சாவு!! குறட்டால் தாக்கிய தந்தை!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் குறடால் தாக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.


கணவனால் மனைவி மீது வீசப்பட்ட குறடு,  தவறுதலாக குழந்தை மீது வீழ்ந்ததில் குறித்த குழந்தை படுகாயமடைந்தது.

தாக்குதலுக்குள்ளான குழந்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபனது வீட்டில் கடந்த 4ஆம் திகதி  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழந்தையின் தந்தை தப்பிச் சென்றார்.

இந்நிலையில் தலைமறைவாகிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.