ஆப்கானிஸ்தானுக்கு சுகாதார அச்சுறுத்தல்!!

ஆப்கானிஸ்தான் பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுமென உலக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் செயற்பட்ட சுகாதார அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளுக்கு மறு அறிவித்தல்வரை தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் அதுகுறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தாரிக் ஜசரேவிக் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

குறித்த தடையைத் தொடர்ந்து மருத்துவ வசிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ, மருந்துப் பொருட்களை அனுப்பவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார சேவையை பெற்றுக்கொள்வது அம்மக்களின் உரிமையாகும். இந்நிலையில், இவ்விடயத்தில் நடுநிலை வகிக்குமாறும் சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஆப்கானிஸ்தானின் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தாரிக் ஜசரேவிக் கூறியுள்ளார்.

மேற்குலக ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தோற்கடிப்பதோடு, வெளிநாட்டு படைகளை வெளியேற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் போரிட்டு வருகின்றனர். 17 வருடகாலமாக நீடிக்கும் இந்த யுத்தத்தினால் அங்கு பாரிய சுகாதார பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக போலியோ தொற்று பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்ற நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் அங்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.