“ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் திறப்பு!!

“ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்று (12) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டி நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டர். ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.