பெண் எம்.பி.,-யை பார்த்து ரசித்துக் கொண்டே சுய இன்பம்; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
பெண் எம்.பி.,-யை பார்த்து ரசித்துக் கொண்டே ஓடும் பேருந்தில் சுய இன்பம் செய்த நபரை லண்டன் போலீசார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நாஸ் ஷா, பிரிட்டனின் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். அந்நாட்டு எம்.பி.,-யாக இருக்கும் இவர், கடந்த 1-ம் தேதி பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில் இருந்த நபர் ஒருவர், இவரை பார்த்து ரசித்த வண்ணம் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாஸ் ஷா, பேருந்தின் ஓட்டுநரிடம் சென்று கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டார். இதையடுத்து, மத்திய லண்டனில் உள்ள ஒயிட் ஹால் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நாஸ் ஷா கூறுகையில், இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் தனக்கு நேர்ந்ததில்லை என்றும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தான் மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 90 சதவீதம் பேர் பாலியல் தொடர்பான தொந்திரவுகளுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்துள்ள நாஸ் ஷா, பெரும்பாலானோர் இது தொடர்பாக புகார் அளிப்பதில்லை எனவும், புகார் அளிக்காவிடில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நாஸ் ஷா, பிரிட்டனின் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். அந்நாட்டு எம்.பி.,-யாக இருக்கும் இவர், கடந்த 1-ம் தேதி பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்தில் இருந்த நபர் ஒருவர், இவரை பார்த்து ரசித்த வண்ணம் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாஸ் ஷா, பேருந்தின் ஓட்டுநரிடம் சென்று கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டார். இதையடுத்து, மத்திய லண்டனில் உள்ள ஒயிட் ஹால் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து நாஸ் ஷா கூறுகையில், இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் தனக்கு நேர்ந்ததில்லை என்றும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தான் மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 90 சதவீதம் பேர் பாலியல் தொடர்பான தொந்திரவுகளுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்துள்ள நாஸ் ஷா, பெரும்பாலானோர் இது தொடர்பாக புகார் அளிப்பதில்லை எனவும், புகார் அளிக்காவிடில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை