தமிழ் தலைமைகள் அரசிற்கு ஆதரவளித்து எம்மை ஏமாற்றுகின்றனர் – உறவுகள் சாடல்!!

தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் அரசிற்கு ஆதரவளித்து தங்களை ஏமாற்றி வருவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


சித்திரை புதுவருட பிறப்பை இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இலங்கை மக்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் தாம் தெருவில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளை தவிற வேறெதுவும் தமக்கு வேண்டாமென்றும் புத்தாண்டை கொண்டாடுவது போன்ற வேறு விடயங்களில் மனதை செலுத்த தமக்கு முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளின் நினைவுகளினால், இருக்கின்ற பிள்ளைகளோடு புதுவருடத்தை கொண்டாட முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.