சூடானில் இராணுவ ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது!!

சூடானில் அமுலில் இருந்த இராணுவ ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இடைக்கால இராணுவ சபையின் சபைத் தலைவர் லெப்டினன் ஜெனரல் அப்தெல் பட் அல் புர்ஹான் தெரிவித்துள்ளார்.


அவசர சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதாக தெரிவித்த இடைக்கால சபையின் தலைவர், மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு அவர்களை அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

இடைக்கால இராணுவ சபையின் தலைவராக நேற்று (சனிக்கிழமை) சூடான் தேசிய ஊடகத்தின் ஊடாக மக்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இதேவேளை மாநிலங்களுக்கு நியமித்த இராணுவ ஆளுநர்களையும் இராணுவத் தளபதிகளின் நியமனங்களையும் நீக்குவதாக அவர் குறிப்பிட்டார். சிவில் அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குடன் இரண்டு வருட காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

மேலும் மக்கள் ஆட்சி, அரசியல் கட்சிகள் ஊடாக தோற்றுவிக்கப்படும் என்றும்  அரச நிறுவனங்கள் மறுசீரமைப்படுவதுடன் பாகுபாடான நியமனங்கள் அனைத்தும் நீக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.