கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் தீவிர விசாரணை!!

லூட்டன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.


தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

குறித்த நான்கு இலங்கையர்களும் பெட்ப்வேச்சர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

லூட்டன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்புப் பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.

2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு இணங்க குறித்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதால், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ஏடன் பகுதியின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், மொரக்கோ, ஈரான், ஈராக் பாலத்தீனம், எகிப்து மற்றும் ரியூனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 51 சிரிய நாட்டவர்களும், 37 ஆப்கானிஸ்தானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட 558 பேரிடமும் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த நாட்டுப் பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின்னர், அவர்கள் தொடர்பான மேலதிக விடயங்கள் முன்னெடுக்கப்படும் என துருக்கியப் பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இவ்வாறு துருக்கி ஊடாக ஐரோப்பியநாடுகளுக்கு பயணித்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.